சூலூரில் பல லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் - ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வு!

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கோவை சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பட்டினம், பீடம்பள்ளி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதன்படி கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் 69 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை உர தயாரிப்பு கூடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து குப்பைகள் பிரித்தெடுக்கும் முறை மற்றும் உர தயாரிப்பு குறித்துக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து பட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக பங்களிப்புடன் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு அடுக்கு பள்ளி வகுப்பறை கட்டிடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டார்.



மேலும் பட்டினம் தொடக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளில் கற்றல் திறன் குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் 87,500 மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள வெங்காய சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு விவசாயிகளிடம் அதன் பயன்கள் குறித்துக் கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து பீடம்பள்ளி ஊராட்சியில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அங்கு பணியாற்றி வரும் பணியாளர்களிடம் கேட்டறிந்து பயனாளிகளுக்கு விரைவாக உரிய நேரத்தில் மருத்துவ சேவைகளை வழங்க உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 3.60 லட்சம் மதிப்பில் பாப்பம்பட்டி மெயின் ரோடு முதல் அதிர்ஷ்ட கார்டன் வரை சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினையும் அம்மன் குளம் கோவில் நிலத்தில் 20 ஏக்கர் மியாவாக்கி முறையில் மூலிகை மரங்கள் கொண்ட அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...