கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க கோரிக்கை!

பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: கோவை - பொள்ளாச்சி இடையே கூடுதல் ரயில் இயக்க பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில்வே நிலையத்தில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் எஸ்.பால்சிங்தோமர் ஆய்வு மேற்கொண்டார். ரயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் மயமாக்கல் நிறைவு பணியைப் பார்வையிட்டதுடன், பயணிகளுக்கு அடிப்படை வசதி எவ்வாறு உள்ளது எனவும் ஆய்வு செய்தார்.

முன்னதாக பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து வரும் போது தண்டவாளத்தின் உறுதித் தன்மை, அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலசங்க தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் நல்லசாமி மற்றும் பலர் பாலக்காடு கோட்ட மேலாளர் எஸ்.பால்சிங்தோமரிடம் பல்வேறு கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனுவில், பொள்ளாச்சி வழித்தடத்தில் மீட்டர் கேஜ் இருப்புப் பாதை நடைமுறையில், இருக்கும் போது அந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சியிலிருந்து கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக கோவைக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை 100 கி.மீட்டராக அதிகப்படுத்த வேண்டும். பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்று கொண்ட கோட்ட மேலாளர் கூறும்போது, பொள்ளாச்சி ரயில் நிலையத்துக்குத் தேவையான அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசின் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்படும். பொள்ளாச்சியிலிருந்து புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்கப்படும், என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...