தாராபுரம் அருகே நிலத்தை ஆக்கிரமித்த தனி நபர் - மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

தாராபுரம் அடுத்த காசிலிங்கம் பாளையம் நாவீதன் புதூரை சேர்ந்த மயிலால் என்பவருக்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதை மீட்டு தரக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தங்களது நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதை மீட்டு தர வலியுறுத்தி ஒரு குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் தாராபுரம் காசிலிங்கம்பாளையம் நாவீதன் புதூரை சேர்ந்த மயிலால் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்து, தங்களது நிலத்தை சட்ட விரோதமாக தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதாக ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

எனக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தையும் சேர்த்து அப்பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளார்.

அந்த கம்பி வேலிக்குள் பொது குடிநீர் குழாய் உள்ளதால், ஊரைச் சுற்றிக்கொண்டு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இதனால், அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, ஆக்கிரமித்து அமைத்துள்ள கம்பிவேலியை அகற்றி தண்ணீர் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், எங்கள் பகுதிக்குள் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வந்து அடிக்கடி மிரட்டுகிறார்கள். கோவில் இடத்திற்கு நாங்கள் வரக்கூடாது என்றும் அடக்கு முறையை கையாண்டு வருகிறார்கள் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...