கிணத்துக்கடவு அருகே குடும்பத்தகராறால் விபரீதம் - ஒர்க் ஷாப் தொழிலாளி தற்கொலை

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் குடிபழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத்தகராறால், ஓர்க் ஷாப் தொழிலாளி நாராயணசாமி என்பவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கிணத்துக்கடவு அருகே முத்துக்கவுண்டனூரில் உள்ள மாரியம்மன் கோவில்வீதியை சேர்ந்தவர் நாராயண சாமி(வயது49). இவர் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி(வயது44) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையில் நாராயணசாமி மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும், குடிபோதையில் வீட்டுக்கு வந்த நாராயணசாமி பொருட்களை அடித்து உடைத்ததோடு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால், அவரது மனைவி தனது குழந்தைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.



பின்னர் நள்ளிரவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது துப்பட்டாவால் நாராயணசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...