கோவை கரும்புக்கடை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல் - பரபரப்பு!

கோவை மாநகராட்சியின் 62வது வார்டுக்கு உட்பட்ட கரும்புக்கடை மற்றும் சாரமேடு பகுதிகளில் முறையாக தண்ணீர் விநியோகிக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கரும்புக்கடை சந்திப்பில் பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகே முறையாக தண்ணீர் விநியோகம் செய்யாத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சி 62 வது வார்டுக்கு உட்பட்டகரும்புக்கடை மற்றும் சாரமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள். முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, கரும்புக்கடை சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த மறியலில் ஈடுபட்டுள்ள பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து தண்ணீர் வேண்டும் எனக்கூறி முழக்கங்களை எழுப்பினர். மேலும் 62-வது வார்டு கவுன்சிலரை காணவில்லை என்றும் கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய அப்பகுதி மக்கள், இதுவரை தங்கள் கவுன்சிலர் ரேவதி முரளி கூட தங்களை வந்து சந்திக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

மேலும் சாலைகள் சீரமைக்கப்படாததால் மழை காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர். தங்கள் வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள், தங்களை சந்திக்காத வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், வார்டு கவுன்சிலர் ரேவதி முரளி நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், லாரி மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...