கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு - சர்வர் கைது

கோவை உக்கடம் பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பைசல் என்பவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புதுக்கோட்டை சேர்ந்த சர்வர் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதி சார்ந்தவர் பைசல். இவர் பழக்கடையில் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில். இவர் தனது வேலையை முடித்துவிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.தான் கூலித் தொழிலாளி என்றும், தன்னிடம் பணம் இல்லை என்று ஃபைசல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த நபர் கத்தி முனையில் பைசலின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து பைசல் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்வந்த குமரேசன், வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...