கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு - சர்வர் கைது

கோவை உக்கடம் பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பைசல் என்பவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புதுக்கோட்டை சேர்ந்த சர்வர் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதி சார்ந்தவர் பைசல். இவர் பழக்கடையில் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில். இவர் தனது வேலையை முடித்துவிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.தான் கூலித் தொழிலாளி என்றும், தன்னிடம் பணம் இல்லை என்று ஃபைசல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த நபர் கத்தி முனையில் பைசலின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து பைசல் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்வந்த குமரேசன், வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...