கோவையில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்திமுனையில் பணம் பறிப்பு - சர்வர் கைது

கோவை உக்கடம் பகுதியில் பணி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த பைசல் என்பவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த புதுக்கோட்டை சேர்ந்த சர்வர் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதி சார்ந்தவர் பைசல். இவர் பழக்கடையில் கூழிதொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில். இவர் தனது வேலையை முடித்துவிட்டு ஈஸ்வரன் கோயில் வீதியில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு நபர், அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.தான் கூலித் தொழிலாளி என்றும், தன்னிடம் பணம் இல்லை என்று ஃபைசல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், அந்த நபர் கத்தி முனையில் பைசலின் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்துச் சென்றார்.

இதுகுறித்து பைசல் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டை சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்தது. ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை செய்வந்த குமரேசன், வழிப்பறியில் ஈடுபட்டது உறுதியானதால், அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...