பொள்ளாச்சி அருகே சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் - தந்தையின் நண்பர் கைது

பொள்ளாச்சி அருகே நண்பரின் மகளான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 14 வயது மகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு காணவில்லை என சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த தாலுக்கா காவல் நிலைய போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் சிறுமியின் தந்தையின் நண்பர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கேரளா அருகே பதுங்கி இருந்த 47 வயது கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் அங்கிருந்த சிறுமியை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை அந்த நபர் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...