பொள்ளாச்சி பேருந்து நிலைய மொட்டை மாடியிலிருந்து குதித்த இளைஞரால் பரபரப்பு!

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து மதுபோதையில் கீழே குதித்து படுகாயமடைந்த ராமபட்டினத்தை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து திடீரென ஒரு இளைஞர் கீழே குதித்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீசார், மதுபோதையில் படுகாயங்களுடன் இருந்த இளைஞரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



மதுபோதையில் பேருந்து நிலையத்தின் மொட்டை மாடியில் இருந்து இளைஞர் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



போலீசார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் ராமபட்டினத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கின்ற ஜெயசூர்யா (வயது19) என்பது தெரிய வந்தது.



எதற்காக மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...