பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் கொள்ளை - விசாரணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியை டெசந்தா மேரி என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி நகர் பகுதி ராஜமீல் பகுதியில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஆசிரியை டெசந்தா மேரி. இவர் கடந்த நாட்களுக்கு முன்பு வெளியில் சென்றவர் ஆழியார் அறிவு திருக்கோவிலில் தங்கி தியான பயிற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.



அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் பத்து சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.



இதையடுத்து, டெசந்தா மேரி பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மேற்கு காவல் நிலைய போலீசார் தடயங்களை ஆய்வு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களை வைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...