கோவை மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி! - பரபரப்பு

ஆட்டோ ஓட்டக்கூடாது என்று சிலர் தொடர்ந்து மிரட்டி வருவதாக ஒரு பெண் உட்பட 3 ஆட்டோ ஓட்டுநர்கள், தங்களின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.

இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்கள் மனுக்களை அளிக்க வந்த வண்ணம் உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை காவல்துறையினர் சோதனை செய்த பிறகே ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.



இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் வரும்போது, அலுவலகம் முன்பு ஒரு பெண் உட்பட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.



அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மேல் தண்ணீர் ஊற்றி, அந்த மண்ணெண்ணெய் கேன்களை பறிமுதல் செய்து, அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அவர்கள் துடியலூர் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் ஆன்ந்த்குமார், ரகு, அகமது, என்பதும் அப்பெண் ரகுவின் தாயார் லட்சுமி என்பதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து பேசிய அவர்களது குடும்பத்தினர், பல ஆண்டுகளாக அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக அங்குள்ளவர்கள் இவர்களை ஆட்டோ ஓட்டக்கூடாது என மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவித்தனர்.

அந்த ஆட்டோ ஸ்டாண்ட் பாஜக கட்சியை சேர்ந்தது எனவும், இவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களையும் பாஜகவில் இணையும்படி நிர்பந்திப்பதாகவும் குற்றச்சாட்டினர். இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து அதன்மூலம் ஆர்டிஓ அங்கு விசாரணை செய்தனர்.



இதையடுத்து அதிகப்படியான மிரட்டல்கள் வருவதாக தெரிவித்தனர். வாகன கடன், குழந்தைகளுக்கான பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர்.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...