கோவையில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மர்ம நபர்கள் தாக்கிய நிலையில், அப்பகுதியில் நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோ, பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவின. இந்தப் பொய்யான குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுத்து, இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது.



வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதாக வெளியான தகவல்களை அடுத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, காவல்துறை பாதுகாப்பு அளிக்கின்றது.



இந்த நிலையில், கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில தொழிலாளர்களை மர்மநபர்கள் அடித்ததாக தகவல் பரவியது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்ககோரி வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தருவதாக போலீசார் உறுதியளித்தனர்.

மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



வடமாநிலத் தொழிலாளர் தாக்கப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கு கூடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...