சாதி ஆவணக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் - உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டத்தில் வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டம், உடுமலையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ரீதியான ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில், சங்கரின் மனைவி கௌசல்யா, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கனகராஜ், தமிழ்ப்புலிகள் அமைப்பை சார்ந்த நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் இரா.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்று சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய விடுதலையில் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், சாதி ஆணவ கொலைக்கு எதிராக சட்டங்கள் இல்லை என்பதாலேயே ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கேட்கப்படுகிறது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தாத போராட்டங்களே இல்லை. தொல்.திருமாவளவன் பேசாத பேச்சுக்களே இல்லை. ஆணவக் கொலைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சாதிய ஆணவப்படு கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும், என்று வலியுறுத்தினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...