சாதி ஆவணக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் - உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டத்தில் வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டம், உடுமலையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ரீதியான ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில், சங்கரின் மனைவி கௌசல்யா, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கனகராஜ், தமிழ்ப்புலிகள் அமைப்பை சார்ந்த நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் இரா.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்று சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய விடுதலையில் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், சாதி ஆணவ கொலைக்கு எதிராக சட்டங்கள் இல்லை என்பதாலேயே ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கேட்கப்படுகிறது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தாத போராட்டங்களே இல்லை. தொல்.திருமாவளவன் பேசாத பேச்சுக்களே இல்லை. ஆணவக் கொலைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சாதிய ஆணவப்படு கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும், என்று வலியுறுத்தினார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...