சாதி ஆவணக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் - உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டத்தில் வலியுறுத்தல்

சாதி மறுப்பு திருமணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் நினைவேந்தல் கூட்டம், உடுமலையில் நடைபெற்றது. தமிழகத்தில் சாதி ரீதியான ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.



இதில், சங்கரின் மனைவி கௌசல்யா, இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கனகராஜ், தமிழ்ப்புலிகள் அமைப்பை சார்ந்த நாகை திருவள்ளுவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் இரா.விக்ரமன் உள்ளிட்டோர் பங்கேற்று சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்தினர்.



நிகழ்ச்சியில் பேசிய விடுதலையில் சிறுத்தைகள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன், சாதி ஆணவ கொலைக்கு எதிராக சட்டங்கள் இல்லை என்பதாலேயே ஆணவ கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் கேட்கப்படுகிறது. இதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தாத போராட்டங்களே இல்லை. தொல்.திருமாவளவன் பேசாத பேச்சுக்களே இல்லை. ஆணவக் கொலைகளால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே. சாதிய ஆணவப்படு கொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும், என்று வலியுறுத்தினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...