கோவையில் 128 மையங்களில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - 35,827 மாணவர்கள் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் உள்ள 360 பள்ளிகளைச் சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் உட்பட மொத்தம் 35,827 பேர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அட்டவணைப்படி இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது.



கோவை: தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான 6 தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 12 வினாத்தாள் பாதுகாப்பு மையங்கள், 2 விடைத்தாள் பாதுகாப்பு மையங்கள், 32 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 360 பள்ளிகளைச் சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் உட்பட மொத்தம் 35,827 பேர் இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். தேர்வு அட்டவணைப்படி இன்று மொழித்தாள் தேர்வு நடைபெறுகிறது.

மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. தேர்வு வினாத்தாள்களை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கும் பணி நேற்றும், இன்றும் நடைபெற்றது.

மேலும், மாணவர்கள், தங்களது தேர்வு மையத்தை எளிதாகக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் வெளியே உள்ள தகவல் பலகையில் அறை எண், ஹால் டிக்கெட் எண், தேர்வு தேதி உள்ளிட்டவை அடங்கிய அறிவிக்கைகள் ஒட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வின் போதும், காலை நேரத்தில் வினாத்தாள்கள் ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்படும். தேர்வுக் கூடத்தில் மாணவர்களின் முறைகேடுகளை கண்காணிக்கவும், தடுக்கவும் 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டுமெனவும், நடத்தை விதிகளை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுத் தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு தடையில்லா பேருந்து சேவை மற்றும் மின் விநியோகம் செய்து தரப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...