ஆஸ்கர் விருது வென்றது ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நீலகிரி மாவட்டம், முதுமலையை சேர்ந்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி குறித்த ‘The Elephant Whisperers’எனும் ஆவணப்படம், ஆஸ்கர் விருது வென்றுள்ளது. அனைத்து விருதுக்கும் தகுதியான ஆவணப்படம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது விழா அங்குள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக அங்கம் வகித்துள்ளார்.



இந்நிலையில், தமிழகத்தில் படமாக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவண குறும்படமாக, ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.



இந்த ஆவணப்படமானது, தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி, அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகி குன்செல்வெஸ் இயக்கத்தில், குனெட் மொன்கோ தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.



காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியல் மற்றும் யானைகளுடன் அவர்களுக்கான உறவையும் இந்த ஆவணப்படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து, உலகின் மூலைமுடுக்கெல்லாம் தற்போது பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆஸ்கர் விருதுவென்ற இந்த ஆவணப்படத்திற்கும், படக்குழுவிற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அனைத்து விருதுக்கும் தகுதியான ஆவணப்படம் என்றும், முதன் முதலாக இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததைவிட சிறந்த செய்தி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...