ஆஸ்கர் விருது வென்றது ‘The Elephant Whisperers’ ஆவணப்படம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நீலகிரி மாவட்டம், முதுமலையை சேர்ந்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி குறித்த ‘The Elephant Whisperers’எனும் ஆவணப்படம், ஆஸ்கர் விருது வென்றுள்ளது. அனைத்து விருதுக்கும் தகுதியான ஆவணப்படம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது விழா அங்குள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று காலை 5:30 மணிக்கு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த விழாவில், இந்திய நடிகை தீபிகா படுகோன் விருது வழங்குபவர்களில் ஒருவராக அங்கம் வகித்துள்ளார்.



இந்நிலையில், தமிழகத்தில் படமாக்கப்பட்ட ‘The Elephant Whisperers’ என்ற ஆவணப்படம், சிறந்த ஆவண குறும்படமாக, ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.



இந்த ஆவணப்படமானது, தமிழ்நாட்டின் முதுமலையில் யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரித்த பழங்குடியின தம்பதி பொம்மன் - பெள்ளி, அவர்கள் வளர்த்த ரகு என்ற யானையையும் மையமாக வைத்து வன புகைப்பட கலைஞர் கார்த்திகி குன்செல்வெஸ் இயக்கத்தில், குனெட் மொன்கோ தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.



காட்டுநாயக்கர் பழங்குடிகளான பொம்மன், பெள்ளியின் வாழ்வியல் மற்றும் யானைகளுடன் அவர்களுக்கான உறவையும் இந்த ஆவணப்படம் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்து, உலகின் மூலைமுடுக்கெல்லாம் தற்போது பொம்மன், பெள்ளி என்ற பெயர்களை முணுமுணுக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆஸ்கர் விருதுவென்ற இந்த ஆவணப்படத்திற்கும், படக்குழுவிற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், அனைத்து விருதுக்கும் தகுதியான ஆவணப்படம் என்றும், முதன் முதலாக இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததைவிட சிறந்த செய்தி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...