குண்டடம் அருகே பாம்பு கடித்து முதியவர் உயிரிழப்பு

குண்டடம் அருகேயுள்ள கெத்தல்ரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன்(75). மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவர் சமையல் அறையில் சமைத்த போது, அங்கு மறைந்திருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருப்பூர்: குண்டடம் அருகே முதியவரை பாம்பு கடித்ததில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள கெத்தல்ரேவ் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தன் (75), மரம் ஏறும் தொழில் செய்து வந்த இவர், கடந்த 8ஆம் தேதி வீட்டில் சமையல் செய்தபோது சிலிண்டருக்கு அடியிலிருந்த கட்டுவிரியன் பாம்பு கடித்தது.

வலியால் துடித்த அவரை அருகிலிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த முத்தன் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...