நாளை பிளஸ்2 பொதுத்தேர்வு: பொள்ளாச்சியில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு!

நாளைய தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில் பொள்ளாச்சியில் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் +2 மாணவர்களுக்கான வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நாளை (13.3.2023) காலை தொடங்க உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் தனி தேர்வர்கள் உட்பட 4,143 மாணவர்கள் 4,437 மாணவிகள் என மொத்தம் 8,580 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.

இதற்காக தனித்தேர்வு எழுதும் மையம் உட்பட மொத்தம் 37 மையங்களில் பொது தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

முதன்மை தேர்வாளர்கள் துறை அலுவலர்கள் என 74 பேர், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் 640 பேரும், அலுவலகப் பணியாளர்கள் வழித்தட அலுவலர்கள் பறக்கும் படை என மொத்தம் 800 க்கும் மேற்பட்டோர் இந்த தேர்வு பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 7 ஒன்றியங்ளில் பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு, வால்பாறை என மூன்று வினாத்தாள் மையங்கள் இருப்பு மையங்களாக தேர்வு செய்யப்பட்டது.

இந்த மையங்களில் 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.



மேலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



தேர்வு எழுதும் மையங்களில், மேஜையில் ஹால் டிக்கட் எண்கள் எழுதப்பட்டு அரசு அறிவுறுத்தலின்படி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

தவறுகள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...