கோவையில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - பார்வையாளர்களை வியக்க வைத்த குழந்தைகள்

கோவையில் தனியார் அமைப்பு சார்பில் “யாதுமாகி நின்றவள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.



கோவை: கோவையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஒய்யார நடைபோட்ட குழந்தைகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தினர்.

கோவையில் இயங்கி வரும் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்ட்டியூட் என்ற தனியார் அமைப்பு, பெண் தொழில் முனைவோர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

பெண்களுக்கான ஆடை தயாரிக்கும் பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இந்த அமைப்பு மூன்றாவது ஆண்டாக "யாதுமாகி நின்றவள்" எனும் தலைப்பில் பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியை கோவை சரவணம்பட்டி வணிக வளாகத்தில் நடத்தியது.



இதில் பெண்கள் தங்களது முயற்சியில் தயாரித்த ஆடைகளை அவர்களது குழந்தைகளுக்கு அணிவித்து அணிவகுப்பில் பங்கேற்க வைத்தனர்.



இதில் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வந்த குழந்தைகள், ஒய்யார நடைபோட்டது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.



மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...