வால்பாறை - அதிரப்பள்ளி சாலை 10 நாட்களுக்கு மூடல் : சாலை பராமரிப்பு காரணமாக நடவடிக்கை!

கோவை வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி உள்ளது. வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக மழுக்கப்பாறை அதிரப்பள்ளி செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையை சுற்றுலா பயணிகளும், அரசு பேருந்தும் கேரளாவிற்கு செல்வதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வனப்பகுதியில் செல்ல வேண்டும்.

வனப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் சாலையை பராமரிக்க கேரளா அரசு பணிகள் செய்து வருகிறது. தார் சாலை அமைக்கும் பணி தீவிரம் அடைந்ததால் மழுக்கப்பாறை வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்ல 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



மழுக்கப்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பகுதி வரை தார் சாலை பராமரிப்பு நடப்பதால் இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா வாகனங்கள் தனியார் வாகனங்கள் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...