வால்பாறை - அதிரப்பள்ளி சாலை 10 நாட்களுக்கு மூடல் : சாலை பராமரிப்பு காரணமாக நடவடிக்கை!

கோவை வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக 10 நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்லும் சாலை பராமரிப்பு பணி காரணமாக 10 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

வால்பாறை அருகே கேரளா மாநிலம் அதரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதி உள்ளது. வால்பாறையில் இருந்து வனப்பகுதி வழியாக மழுக்கப்பாறை அதிரப்பள்ளி செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையை சுற்றுலா பயணிகளும், அரசு பேருந்தும் கேரளாவிற்கு செல்வதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சுமார் 60 கிலோ மீட்டர் வனப்பகுதியில் செல்ல வேண்டும்.

வனப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் சாலையை பராமரிக்க கேரளா அரசு பணிகள் செய்து வருகிறது. தார் சாலை அமைக்கும் பணி தீவிரம் அடைந்ததால் மழுக்கப்பாறை வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளிக்கு செல்ல 10 நாட்களுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.



மழுக்கப்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி பகுதி வரை தார் சாலை பராமரிப்பு நடப்பதால் இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா வாகனங்கள் தனியார் வாகனங்கள் அனைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...