வடகோவை அருகே தண்டவாளத்தில் கிடந்த சடலம் - ரயில்வே போலீசார் விசாரணை!

வடகோவை ரயில்நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த 40 மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார் விபத்தா? தற்கொலையா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை வடகோவை ரயில்நிலையம் அருகே ரயிலில் சிக்கி ஒருவர் பலியான நிலையில், விபத்தா, தற்கொலையா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடகோவை ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இந்நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் ராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இது விபத்தா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...