கோவை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க தடை!


தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக மழை பொய்த்துப் போய் உள்ளதாலும், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததன் காரணத்தினாலும் பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது.

இதனால், விவசாயம், குடிநீர் உள்ளிட்ட அத்யாவசியத் தேவைகளுக்கு தண்ணீர் இன்றி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக வறட்சியின் காரணமாக விவசாயிகள் உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வறட்சியானது பசுமை செழித்திருந்த கோவை மாவட்டத்தையும் சமீப காலமாக தாக்கி வருகின்றனது. அதன் படி கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீராதாரமாக இருந்த சிறுவாணி, அத்திக்கடவு, பவானி, ஆழியார் உள்ளிட்ட அணைகளுக்கு சரியான நீர் வரத்து இல்லாததாலும், பல்வேறு காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததின் காரணத்தாலும் கோவையில் தற்போது வறட்சி நிலவி வருகிறது.

இதனைத்தொடர்ந்து தற்போது கோவை மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் புதிதாக ஆழ்துளை கிணறுகளை அமைக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

ஏற்கனவே இருக்கும் பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கவும், புனரமைக்கவும் எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...