வெள்ளலூரில் குடும்பத்தகராறில் கணவரை வெட்டிய மனைவி - பரபரப்பு!

வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சுப்பிரமணி -செல்வி தம்பதி பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில், மகளை சந்திக்க வந்த சுப்பிரமணியுடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி கத்தியால் கணவரை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் அருகே குடும்ப தகராறில் கணவரை மனைவியே கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளலூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி (44) -செல்வி தம்பதி. இவர்களுக்கு திருமணம் ஆகி சூர்யா (21) என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக சுப்பிரமணி மற்றும் செல்வி ஆகிய இருவரும் பிரிந்து சுப்பிரமணி தனியாகவும், செல்வி மகன் மற்றும் மகளுடனும் வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே அடிக்கடி தனது மகள் பவித்ராவை மட்டும் தந்தை சுப்பிரமணி சந்தித்து வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். வழக்கம்போல சுப்பிரமணி நேற்று முன்தினம் தனது மகள் பவித்ராவை சந்தித்து பேசி விட்டு, செலவிற்கு பணம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மகன் சூர்யா, சுப்பிரமணியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார். உடன் இருந்த மனைவி செல்வி திடீரென வீட்டில் இருந்த கத்தியால் சுப்பிரமணியின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், படுகாயமடைந்த அவரை மகள் பவித்ரா மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீசார், மனைவி செல்வி மற்றும் மகன் சூர்யா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப தகராறில் மனைவியே கணவரை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...