உடுமலையில் ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வாங்கி தப்பியோட்டம்! - போலீசார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மளிகை கடையில் கோயில் விழாவிற்கு தேவைப்படுவதாக கூறி ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி, பணம் கொடுக்காமல் பொருட்களோடு தப்பிய நபரை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர்.



திருப்பூர்: உடுமலை கபூர்கான் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஸ்டாலின். இவரது கடைக்கு வந்த ஒருவர், ஆதிபராசக்தி கோயிலில் அன்னதானம் செய்வதற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்ததாக கூறியுள்ளார்.



இதையடுத்து, அவர் கொடுத்த லிஸ்ட்படி அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் என ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஒரு வாடகை ஆட்டோவில் ஏற்றி, ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் பகுதியில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றார்.

அங்கு பொருட்களை இறக்கி வைத்த அந்த நபர், மேலும் சில பொருட்களை தேவைப்படுவதாகவும், அவற்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, மொத்தமாக பணத்தை பெற்றுக் கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து, மளிகைக் கடைக்காரரும் கடைக்குச்சென்று பொருட்களை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு வந்தார்.



ஆனால், அங்கே அந்த நபரை காணவில்லை. மளிகைப் பொருட்களையும் காணவில்லை. கோயிலில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, வேறு சில கோயில்களுக்கு பொருட்களை பிரித்து கொடுத்துவிட்டு வருவதாக காரில் ஏற்றி சென்றதாக கூறியுள்ளனர். ஆனால், எங்கு தேடியும் அந்த நபரை காணவில்லை.



அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் இதுபற்றி உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து நூதன முறையில் மளிகை பொருட்களை திருடிய டிப்டாப் ஆசாமியை சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...