கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது - செல்போன், கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

கோவை, குனியமுத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த அசாருதீன், சர்புதீன் என இருவரை போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர். மேலும் முஜிபுர் ரஹ்மான் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர பகுதிகளில் கஞ்சா புழக்கத்தை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில் அமைக்கப்பட்ட தனிப்படை போதைப் பொருள் வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூரில் இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.

கோவை குனியமுத்தூர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் குறிச்சிகுளம் அமைந்துள்ளது. குளக்கரை அருகே அரசு உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்கி வருகிறது. பள்ளியின் பின்புறம் சிலர் கஞ்சா விற்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்று வந்த இருவரை பிடித்தனர்.

காவல்துறை விசாரணையில், இருவரும் பிஸ்மி நகரைச் சார்ந்த அசாருதீன் (வயது30), லவ்லி கார்டன் பகுதியைச் சார்ந்த சர்புதீன் (வயது32) என்பது தெரியவந்தது. ஓட்டுநராக இவர்கள் பணியாற்றி வரும் நிலையில், கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டுவந்தது உறுதியானது. இதில் அசாருதீன் மீது ஏற்கனவே பந்தய சாலை மற்றும் பஜார் காவல் நிலையங்களில் போதை பொருள் விற்றதாக வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், இவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை மொத்தமாக தந்து வியாபாரத்தில் ஈடுபடுத்தி வரும் முஜிபுர் ரஹ்மான் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைதான நபர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா வியாபாரிகளுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்படும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...