சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.6.55 லட்சம் மோசடி - கோவை சைபர் கிரைமில் இளைஞர் புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைனில் 6.55 லட்சம் வரையில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை சைபர் கிரைம் போலீசாரிடம், பாதிக்கப்பட்ட கோவை சேரன்மாநகரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.


கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6.55 லட்சம் ரூபாய் இழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை சேரன் மாநகர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (31). பொறியியல் படித்த பி.இ. பட்டதாரியான இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வேலை தொடர்பாக தனது ப்ரஃபைலை ஆன்லைன் வெப் சைட்டுகளில் பதிவேற்றம் செய்து வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு வாட்ஸ் அப்பில், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக, வெளிநாட்டு நம்பர் மூலம் மெசேஜ் வந்தது. அதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, அந்த எண்ணை தொடர்பு கொண்டார். வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசிய அந்த நபர், சிங்கப்பூரில் வேலையில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பணியிலே சேர விசா, பிராசஸிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்து, ஒரு வருடத்தில் ரூ.6.55 லட்சம் ரூபாயை பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியவாறு வேலை வாங்கி தரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 419, 420 IPC & 66D IT Act சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், வேலையின்றி தவித்த இளைஞரை, ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...