சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.6.55 லட்சம் மோசடி - கோவை சைபர் கிரைமில் இளைஞர் புகார்

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஆன்லைனில் 6.55 லட்சம் வரையில் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோவை சைபர் கிரைம் போலீசாரிடம், பாதிக்கப்பட்ட கோவை சேரன்மாநகரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார்.


கோவை: சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறி 6.55 லட்சம் ரூபாய் இழந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை சேரன் மாநகர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (31). பொறியியல் படித்த பி.இ. பட்டதாரியான இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் வேலை தொடர்பாக தனது ப்ரஃபைலை ஆன்லைன் வெப் சைட்டுகளில் பதிவேற்றம் செய்து வேலை தேடி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு வாட்ஸ் அப்பில், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக, வெளிநாட்டு நம்பர் மூலம் மெசேஜ் வந்தது. அதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, அந்த எண்ணை தொடர்பு கொண்டார். வாட்ஸ் அப்பில் மட்டுமே பேசிய அந்த நபர், சிங்கப்பூரில் வேலையில் சேர்த்து விடுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பணியிலே சேர விசா, பிராசஸிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, பணம் கட்ட வேண்டும் எனத் தெரிவித்து, ஒரு வருடத்தில் ரூ.6.55 லட்சம் ரூபாயை பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் கூறியவாறு வேலை வாங்கி தரவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளைஞர், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், 419, 420 IPC & 66D IT Act சட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், வேலையின்றி தவித்த இளைஞரை, ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...