கோவை மத்தியச் சிறையில் கைதிகளுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு

கோவை மத்தியச் சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்கு பிறகு மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாவண்ணம் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்கு சுய தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்புக்காவல் என 2200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்கு பிறகு மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாவண்ணம் சுய தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள யோகா, கல்வி, தொழில் பயிற்சி, நுாலகம் போன்ற பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.



அதன்படி காவல்துறை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், தண்டனை காலத்தினை முடித்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள் சுய தொழில் துவங்கும் வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம், கனரா வங்கி (முன்னோடி வங்கி) சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் ஆண்கள் சிறையில் ஏசி, வாசிங் மெஷின் பழுது பார்த்தல் பயிற்சி மற்றும் பெண்கள் சிறையில் சோப்பாயில், பெனாயில் தயாரித்தல் பயிற்சி வகுப்புகளை இன்று சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வின் போது கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் உதவி பொதுமேலாளர் திருமலை ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...