கோவை மத்தியச் சிறையில் கைதிகளுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு

கோவை மத்தியச் சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்கு பிறகு மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாவண்ணம் சுய தொழில் தொடங்கி வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்கு சுய தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் ஆண் மற்றும் பெண் கைதிகளுக்கான சுய தொழில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் தடுப்புக்காவல் என 2200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தவும், விடுதலைக்கு பிறகு மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடாவண்ணம் சுய தொழில் தொடங்கி அவர்கள் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள யோகா, கல்வி, தொழில் பயிற்சி, நுாலகம் போன்ற பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.



அதன்படி காவல்துறை இயக்குநர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதலின் படியும், தண்டனை காலத்தினை முடித்து விரைவில் விடுதலையாக உள்ள சிறைவாசிகள் சுய தொழில் துவங்கும் வகையில் அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.



கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம், கனரா வங்கி (முன்னோடி வங்கி) சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் மூலம் ஆண்கள் சிறையில் ஏசி, வாசிங் மெஷின் பழுது பார்த்தல் பயிற்சி மற்றும் பெண்கள் சிறையில் சோப்பாயில், பெனாயில் தயாரித்தல் பயிற்சி வகுப்புகளை இன்று சிறைக்கண்காணிப்பாளர் ஊர்மிளா துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வின் போது கனரா வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் உதவி பொதுமேலாளர் திருமலை ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...