பில்லூர் 3ம் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்தார் கோவை ஆட்சியர்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய ரூ.740 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: பில்லூர் மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் கோவை மாநகராட்சியின் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகள் உள்ளடக்கிய ரூ. 740 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் (பவானி ஆற்றினை நீராதாரமாகக் கொண்ட பில்லூர் III பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செந்தில் குமார், மேற்பார்வை பொறியாளர் ராஜி, நிர்வாக பொறியாளர் செல்லமுத்து, உதவி நிர்வாக பொறியாளர்கள் செந்தில்குமார், பட்டன், ராதா ஆகியோர் உடனிருந்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சியுடன், குறிச்சி குனியமுத்தூர் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய நகராட்சி பகுதிகளும் 7 பேரூராட்சிகளும், ஒரு ஊராட்சியும் இணைக்கப்பட்டு மாநகராட்சி விரிவு செய்யப்பட்டது. இவ்வாறு விரிவு செய்யப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான குடிநீரை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பில்லூர் 3ம் குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு 740 கோடி செலவில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இத்திட்டப் பணிகளானது நீரேற்று நிலையம் குழாய் அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு நிலையம், சுரங்கப்பாதை அமைத்தல் என 3 பிரிவுகளாக பிரித்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்படி மாநகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இயல்பு நீருந்து குழாய், சுத்த நீருந்து குழாய் மற்றும் கிளை பிரதான நீருந்து குழாய் என மொத்தம் 90.76 கி.மீ நீளத்திற்கு அமைக்க உத்தேசித்து, 41.கி.மீ நீளத்திற்கு பணிகள் முடிவுற்றுள்ளது எனவும், மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், குழாய்கள் அமைக்கும் பணிகள் 47% சதவிகிதம் முடிவுற்றுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரங்கபாதை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ளது. குழாய்கள் அமைக்கவும், பிரதான தரைமட்ட தொட்டி அமைக்கவும் 156 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது எனவும் இதில் 35.50 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமாகவும், 121 ஏக்கர் நிலம் தனியாருக்குச் சொந்தமானது எனவும் நில கையெடுப்பு பணிகள் அனைத்தும் முடித்து மே மாதத்திற்குள் இத்திட்டம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...