கோவையில் நடந்து சென்றவரை பாட்டிலால் குத்தி வழிப்பறி - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!

கோவை லங்கா கார்னர் பகுதியில் நண்பருடன் நடந்து சென்றுகொண்டிருந்த தொழிலாளி மனோகரன் என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, குவாட்டர் பாட்டிலால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.


கோவை: கோவை லங்கா கார்னர் பகுதியில் மாநகராட்சி கூலித் தொழிலாளி மனோகரன் (வயது37) என்பவர் தனது நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், இவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது, அந்த கும்பல் குவாட்டர் பாட்டிலை உடைத்து மனோகரனை நெஞ்சுப் பகுதியில் குத்தியதால், அவர் வலியில் அலறித் துடித்தார். காயமடைந்த மனோகரன், அவரின் நண்பரிடமிருந்த 2 செல்ஃபொன்களை பறித்துக்கொண்ட அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

காயமடைந்த மனோகரன், கோவை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பந்தய சாலை போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...