பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு - இந்து முன்னணியினர் மனு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம மக்களின் எதிர்ப்பை மீறி இந்த ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் முழுமையாக இந்து மக்கள் வாழும் நிலையில், இங்கே ஜெபக்கூடம் அமைப்பதற்கான காரணம் என்ன எனவும், தொழிற்சாலை கட்டுவதாக ஊராட்சியில் அனுமதி பெற்றுக்கொண்டு ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும், ஆரம்பத்திலேயே இந்த இங்கு கட்டப்படும் கிறிஸ்துவ ஜெபக்கூடத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பல்லடம் காவல் நிலையத்திலும், இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெப கூடத்தை அகற்ற ஆதரவு தெரிவித்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...