பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு - இந்து முன்னணியினர் மனு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம மக்களின் எதிர்ப்பை மீறி இந்த ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் முழுமையாக இந்து மக்கள் வாழும் நிலையில், இங்கே ஜெபக்கூடம் அமைப்பதற்கான காரணம் என்ன எனவும், தொழிற்சாலை கட்டுவதாக ஊராட்சியில் அனுமதி பெற்றுக்கொண்டு ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும், ஆரம்பத்திலேயே இந்த இங்கு கட்டப்படும் கிறிஸ்துவ ஜெபக்கூடத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பல்லடம் காவல் நிலையத்திலும், இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெப கூடத்தை அகற்ற ஆதரவு தெரிவித்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...