பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு - இந்து முன்னணியினர் மனு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: பல்லடம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காளி வேலம்பட்டி கிராமத்தில் புதிதாகக் கிறிஸ்துவ ஜெபக்கூடம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கிராம மக்களின் எதிர்ப்பை மீறி இந்த ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அப்பகுதியில் முழுமையாக இந்து மக்கள் வாழும் நிலையில், இங்கே ஜெபக்கூடம் அமைப்பதற்கான காரணம் என்ன எனவும், தொழிற்சாலை கட்டுவதாக ஊராட்சியில் அனுமதி பெற்றுக்கொண்டு ஜெபக்கூடம் கட்டப்பட்டு வருவதாகவும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மத மோதல்களை உருவாக்கும் வகையிலும், ஆரம்பத்திலேயே இந்த இங்கு கட்டப்படும் கிறிஸ்துவ ஜெபக்கூடத்தை அகற்ற உத்தரவு பிறப்பிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பல்லடம் காவல் நிலையத்திலும், இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஜெப கூடத்தை அகற்ற ஆதரவு தெரிவித்து இதுவரை 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...