சத்தியமங்கலம் அருகே பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து மேம்பாட்டு விழிப்புணர்வு முகாம்!

சத்தியமங்கலம் கடம்பூர் பகுதியில், கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் நடைபெற்ற பழங்குடியினரின் ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமில், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்பட்டன.


ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் சார்பில் பழங்குடியினருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து, சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் பகுதி பத்திரிப்படுகை கிராம மக்களுக்காக ஊட்டச்சத்து மேம்பாட்டிற்கான விழிப்புணர்வு முகாமினை நடத்தப்பட்டது.

இந்த முகாமில், துவக்க உரை ஆற்றிய முதன்மை விஞ்ஞானியும் STC (Scheduled Tribe Component) திட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான, புத்திர பிரதாப் பேசியதாவது,

இந்த விழிப்புணர்வு முகாமானது, ‘பழங்குடியின பிரிவிற்கான மேம்பாட்டு செயல் திட்டம்’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.



சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தலைமலை பகுதியைச் சார்ந்த ராமரணை, பெஜலட்டி, தடசலட்டி, இட்டரை, மாவநத்தம், காளிதிம்பம் ஆகிய கிராமங்கள் மற்றும் கடம்பூர் பகுதியினை சார்ந்த பத்திரிப்படுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 450 பழங்குடியினர் இத்திட்டத்தின் மூலம் பலனடைகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் ‘லஹரி பாய்’ என்ற, 27 வயதே நிரம்பிய பழங்குடியின பெண், 150 விதமான பாரம்பரிய சிறுதானியங்களை ‘விதை வங்கி’ மூலமாக காத்து, பிரதமரின் பாராட்டுகளை பெற்றார். பழங்குடி இன மக்களின் அன்றாட உணவு முறையில் சிறுதானியங்கள் மீண்டும் இடம் பெற வேண்டும், என்றார்.

முகாமில் சிறப்புரை ஆற்றிய கடம்பூர் வனச்சரக அலுவலர் இந்துமதி, பழங்குடியினரின் தேவைகளை அறிவியல் பூர்வமாக கண்டறிந்து இத்திட்டத்தினை செயல்படுத்தி வரும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்திற்கு நன்றி. பழங்குடியின குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிட ஊட்டம் தரும் வீட்டுத் தோட்டம் அமைக்கும் தொழில் நுட்பங்களையும், சிறு தானிய சாகுபடி முறைகளையும் அறிமுகம் செய்து, அதற்கான தரமான காய்கறி, சிறுதானிய விதைகளையும் வழங்கி, வீட்டுத்தோட்டம், சிறுதானிய சாகுபடி, சிறுதானியங்களிலிருந்து சுவையான உணவு தயாரிப்பது எப்படி போன்ற கையேடுகளும் வழங்கிடும் முழுமையான திட்டம் இது. இத்திட்டத்தில் இப்பகுதியில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, இதனை திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என்றார்.

இம்முகாமில், ‘சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டினை’ முன்னிட்டு, சிறுதானிய விதைகள் வழங்கப்பட்டு, திரவ நுண்ணுயிர் மூலம் விதை நேர்த்தி செய்வது எப்படி என்று செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரும்பு இனப்பெருக்கு நிறுவன முதுநிலை விஞ்ஞானிகள், முனைவர் பி. மகேஷ் மற்றும் முனைவர் பி கீதா ஆகியோர் மக்காச்சோள சாகுபடி, சிறுதானிய சாகுபடி, வீட்டுத்தோட்டம் அமைத்தல் குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினர்.



முன்னதாக முகாமில், பத்திரிப்படுகை கிராமத்து மக்கள் ‘ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழி’ எடுத்துக் கொண்டனர்.



இதனைத் தொடர்ந்து, ‘தேனீக்கள் மூலம் யானை, மனித எதிர்கொள்ளலை குறைக்கும் முயற்சிக்காக தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு அது குறித்த செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



பழங்குடியினருக்கு பண்ணை கருவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரேடியோ பெட்டிகள், திரவ வெல்லம் விதைகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிறைவாக கிராம தலைவர் மாதன் நன்றியுரை ஆற்றினார்.

இம்முகாமில், தமிழக வனத்துறை அதிகாரிகள், கரும்பு இனப்பெருக்கு நிறுவன அலுவலர்கள் மற்றும் திரளான பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...