கோவை ஜிஎன் மில்ஸ் அருகே சுப்ரமணியம்பாளையத்தில் மகளிர் தின கொண்டாட்டம்

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.



கோவை: ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.



மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகளும், குப்பைகளைச் சேகரிக்க பிளாஸ்டிக் குப்பை கூடைகளும் வழங்கப்பட்டது.



கோவை ஜி.என்.மில்ஸ் அடுத்துள்ள சுப்பிரமணியம் பாளையம் 15வது வார்டில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் அவிரா பவுண்டேசன் இணைந்து மகளிர் தின விழா கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சிக்கு 15வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கமாக மரக்கன்றுகளை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி மாணவிகள் நேரு நகரில் நட்டு வைத்தனர்.



தொடர்ந்து சுப்பிரமணியம் பாளையம் சாலையில் உள்ள மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சாந்தாமணி பச்சைமுத்து அனைவரையும் வரவேற்று பேசினார். அவிநாசிலிங்கம் கல்லூரியின் ஆசிரியர்கள் சுதா மதி, வள்ளியம்மை, ராதா பிரியா, ஸ்ரீ லட்சுமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

மேலும் அபிராமி பவுண்டேஷன் தலைவர் ஐஸ்வரியா தேவ் கலந்துகொண்டு மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிப் பேசினார். தொடர்ந்து மகளிர்களுக்கு மூச்சு பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.



போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் சிறப்பு பரிசுகளும், 15வது வார்டை சேர்ந்த பெண்களுக்குக் குப்பைக் கூடைகளும் வழங்கப்பட்டன. இறுதியில் சுகாதார மேற்பார்வையாளர் மகேஸ்வரி நன்றி கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...