கோவையில் பொதுத்தேர்வு வினாத்தாளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு!

11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கோவை கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் 12 மையங்களில் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில், 12 மையங்களில் வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 14-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரையிலும் நடைபெறும்.

இதேபோல் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோவை மாவட்டத்தில் 254 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 35,541 மாணவர்களும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 34,259 மாணவர்களும் எழுத உள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை, 41, 526 மாணவர்கள் எழுத உள்ளனர்.

இதையொட்டி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் சென்னையில் இருந்து கோவைக்கு அரசு தேர்வுத்துறை மூலம் கொண்டு வரப்பட்டது. இந்த வினாத்தாள்கள் கோவை, பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்த வினாத்தாள்கள் கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஆவண மையங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுத்தேர்வுக்கான இந்த வினாத்தாள்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் சீல் வைக்கப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய போலீசார் சுழற்சி முறையில் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் கோவை மாவட்டத்தில் மேலும் 11 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வினாத்தாள் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் விரைவில் கோவைக்கு கொண்டு வரப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...

100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண...

கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்ற பெயரில் ரூ.45.50 லட்சம் டிஜிட்டல் மோசடி

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் குணசேகரன் (70) லக்னோ தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸ் என்று கூற...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி: தவெக வேட்பாளர் கனிமொழி தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடைகள், பெட்ரோல் பங்குகளுக்...