கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு விருது - ஸ்வட்ச் பாரத் மிஷனை சிறப்பாக செயல்படுத்தியதற்குப் பாராட்டு

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பறையில் கியூ.ஆர். கோட் முறையினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்புக்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.


கோவை: சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்துறையின் அமைச்சர் திரு.கே.என் நேரு பங்கேற்று தலைமை வகித்தார்.



அதில், ஸ்வச் பாரத் மிஷன்(Swachh Bharat Mission) 2.0 திட்டத்தில் சமூகக் கழிப்பறை/பொதுக் கழிப்பறையில் கியூ.ஆர் கோடு(Q.R.Code) பயன்படுத்தி உபயோகிக்கும் முறையினை 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்புக்கு, அமைச்சர் கே.என். நேரு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பி.பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...