கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசு விருது - ஸ்வட்ச் பாரத் மிஷனை சிறப்பாக செயல்படுத்தியதற்குப் பாராட்டு

ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் பொதுக்கழிப்பறையில் கியூ.ஆர். கோட் முறையினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்புக்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு விருது வழங்கி கவுரவித்துள்ளார்.


கோவை: சென்னையில் நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்துறையின் அமைச்சர் திரு.கே.என் நேரு பங்கேற்று தலைமை வகித்தார்.



அதில், ஸ்வச் பாரத் மிஷன்(Swachh Bharat Mission) 2.0 திட்டத்தில் சமூகக் கழிப்பறை/பொதுக் கழிப்பறையில் கியூ.ஆர் கோடு(Q.R.Code) பயன்படுத்தி உபயோகிக்கும் முறையினை 2022 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்படுத்தியதற்காக கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்புக்கு, அமைச்சர் கே.என். நேரு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ் தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் பி.பொன்னையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...