கோவை பெண்கள் சிறையில் மகளிர் தின கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை ஒட்டி, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனி கிளைச் சிறையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் பெண்கள் தனி கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இதில் தண்டனை, விசாரணை என சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கோவை இரவேல் மறை மாநிலம் மற்றும் நிர்மலா கலைக் கல்லூரி இணைந்து பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தியது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி அனைத்து சிறைவாசிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் மிகுந்த புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியதாக பெண் சிறைவாசிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...