கோவை சைபர் கிரைமில் முதல் குண்டாஸ் - செல்போன் எண்களை வைத்து மோசடி செய்த நபர் மீது பாய்ந்தது!

கோவையில் நண்பர்களின் செல்போன் எண்களை போர்ட் செய்து பணமோசடியில் ஈடுபட்ட விக்னேஷ் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விக்னேஷ் தன்னுடைய நண்பர்களின் மொபைல் நம்பர்களை போர்ட் செய்து, வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் பணம் பெற்று மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.


கோவை: கோவையை சேர்ந்த வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் மற்றும் ஆனந்தகுமார் உள்ளிட்டோரின் தொலைபேசி எண்ணை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் யாரோ PORT செய்திருக்கின்றனர். அதன் மூலம் கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்று மோசடி நடந்திருக்கின்றன.

இந்த நிலையில் பணத்தை பறிகொடுத்தவர்கள் தங்கள் நெம்பரை போர்ட் செய்து யாரோ பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக சிட்டி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த மோசடி தொடர்பாக மொத்தமாக நான்கு புகார்கள் அடுத்தடுத்து பதிவாகின. அதன் அடிப்படையில் 465, 468, 471, 419, 420 IPC 66C 66D IT Act ல் வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் அருண், உதவி ஆய்வாளர் சிவராஜ பாண்டியன் ஆகியோர் அடங்கிய தனிப்படை விக்னேஷ் என்ற நபரை கைது செய்தது.

விக்னேஷ் தன்னுடன் பழகி வந்த நண்பர்களின் ஆவணங்கள் மற்றும் மொபைல் நம்பர்களை அவர்களுக்கு தெரியாமல் எடுத்து, அவர்களின் தொலைபேசி எண்களை போர்ட் (PORT) செய்து, வங்கி கடன் அட்டை கணக்குகள் மற்றும் ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலம் பணம் பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது.



இந்த வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் பயன்படுத்திய மொபைல் போன்கள் மின்னணு சாதனங்கள் பல்வேறு சிம்கார்டுகள் வாகன உரிமங்கள் கார்கள் 3, empty electronic chipset cards ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.



இந்த நிலையில் சைபர் கிரிமினல் விக்னேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசார் தரப்பில் காவல் ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனடிப்படையில் விக்னேஷ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். கோவை சிட்டி சைபர் கிரைமில் மேற்கொள்ளப்பட்ட முதல் குண்டர் தடுப்பு நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...