தாராபுரத்தில் மக்காச்சோளம் ஏலம் - ரூ.12.5 லட்சத்திற்கு விற்பனை!

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 12.50 லட்சத்திற்கு மக்காச்சோளம் விற்பனையானது. அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.


திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த திருப்பூர் விற்பனைக்குழுவின் அலங்கியம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மக்காச்சோளத்திற்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இதற்காக திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் 55 ஆயிரத்து 821 கிலோ மக்காச்சோளத்தை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.



இதில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். அப்போது அதிகபட்சமாக குவிண்டால் ஒன்று ரூ.2ஆயிரத்து 271-க்கும், குறைந்தபட்சமாக ரூ.2ஆயிரத்து 244-க்கும் மக்காச்சோளம் விலைபோனது.

அதன்படி, விவசாயிகள் கொண்டு வந்திருந்த மக்காச்சோளம் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனையானது. இந்த மறைமுக ஏலத்திற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் அருள்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...