தாராபுரத்தில் மகளிர் தின சட்டவிழிப்புணர்வு முகாம் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாமில், நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து மகளிர் தின விழா நிகழ்ச்சியை நடத்தியது. விழாவில் பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சட்ட விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.



இந்த மகளிர் தின விழாவில் தாராபுரம் சார்பு நீதிபதி தர்ம பிரபு, மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நீதிபதி பாபு, மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் எஸ் கே .கார்வேந்தன், தங்கராஜ், செல்வராஜ், பெண் வழக்கறிஞர் பத்மா மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலைச்செழியன், இந்துமதி, தாராபுரம் சார்பு நீதிபதியின் துணைவியார் கௌசல்யா தேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பெருமை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேசினார்.



விழாவில் 30 பெண் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாட்டில் பெண்களின் தனித்துவம் மிக்க ஆளுமை திறன், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவற்றிற்கு தீர்வு காணும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து பேசினர்.



முன்னதாக பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, வினாடிவினா போட்டிகள், கோலம் போடுதல், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு நீதிபதிகள் பரிசுகளை வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...