துடியலூர் அருகே ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டின் மீது மோதி விபத்து!

கோவை கே.என்.ஜி.புதூர் சாலையில் சென்ற கார் ஒன்று மாரியம்மன் கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதிய நிலையில், திடீரென காரின் ஏர் பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஏர்பேக் திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்மேடு தவசி நகர் பகுதியை சேர்ந்தவர் மருதாச்சலம் மூர்த்தி (37). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர் இன்று பிற்பகல் தனது காரில் கே.என்.ஜி புதூர் பகுதியில் இருந்து ஜி.என்.மில்ஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் காரை வேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மருதாச்சலம் மூர்த்தி கே.என்.ஜி புதூர் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐயன்(40) என்பவர் படுகாயம் அடைந்தார்.



இந்நிலையில் விபத்தின் போது காரில் இருந்த ஏர் பேக் திடீரென திறந்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் வலது புறத்தில் இருந்த வீட்டின் மீது மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக வீட்டின் அருகே இருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.



இச்சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் மருதாச்சலம் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...