மகளிர் தின விழா - பெண் அலுவலர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட கோவை ஆட்சியர்

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்று, பெண் அலுவலர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, ஊரக வளர்ச்சித் துறை மகளிர் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் சௌமியா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...