மகளிர் தின விழா - பெண் அலுவலர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்ட கோவை ஆட்சியர்

உலக மகளிர் தினத்தையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பங்கேற்று, பெண் அலுவலர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருவதையொட்டி பெண்களுக்கு பலரும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பணிபுரியும் பெண்கள் அந்நிறுவனம் சார்பில் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பெண்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் மகளிர் தினத்தை ஒட்டி கொண்டாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, ஊரக வளர்ச்சித் துறை மகளிர் அலுவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை, உதவி ஆட்சியர் சௌமியா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செல்வம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...