பல்லடம் அரசுக் கலை கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் முனியன், சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பிலிப்ஸ், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சமூகத்தில் பெண் விடுதலை குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி மாணவிகளிடையே பேசினர்.



இதன் தொடர்ச்சியாக நடனம் நிகழ்ச்சி, மாணவிகளின் பேச்சு என பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Newsletter

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 30ஆம் தேதி நீர்மட்ட நிலவரம் வெளியா...