பல்லடம் அரசுக் கலை கல்லூரியில் மகளிர் தினம் கொண்டாட்டம்

பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் முனியன், சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி பிலிப்ஸ், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.



பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் சமூகத்தில் பெண் விடுதலை குறித்தும் சிறப்பு விருந்தினர்கள் கல்லூரி மாணவிகளிடையே பேசினர்.



இதன் தொடர்ச்சியாக நடனம் நிகழ்ச்சி, மாணவிகளின் பேச்சு என பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...