திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் - பாஜகவை கண்டித்து தாராபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருக்கும் பாஜக, ஆத்திரத்தின் உச்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



பாஜகவின் காட்டுமிராண்டி தனமான இந்த தாக்குதலை கண்டித்து, தாராபுரம் அண்ணாசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னுச்சாமி தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்துசாமி, கோவிந்தராஜ், ராஜேந்திரன் மற்றும் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...