மகளிர் தின கொண்டாட்டம் - கோவையில் பெண் காவலர்களுக்கு பிசியோதெரபி ஆலோசனை!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்காக, கோவை காவல் ஆணையர் அலுவலக நடத்தப்பட்ட வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கினை துணை ஆணையர் சுகாசினி தொடக்கி வைத்தார்.



கோவை: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான "வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு" கோவை காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தொடங்கி வைத்தார்.



இதில், வலி வருவதற்கான காரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை முறைகள், வலி வராமல் தடுக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக பணியில் உள்ள பெண் காவலர்கள் சில நேரங்களில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய சூழலில் உடல் ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மகளிர் தினத்தன்று பிசியோதெரபி சிகிச்சை விழிப்புணர்வு வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...