மகளிர் தின கொண்டாட்டம் - கோவையில் பெண் காவலர்களுக்கு பிசியோதெரபி ஆலோசனை!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்காக, கோவை காவல் ஆணையர் அலுவலக நடத்தப்பட்ட வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கினை துணை ஆணையர் சுகாசினி தொடக்கி வைத்தார்.



கோவை: மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கான "வலியில்லாத வாழ்விற்கு வழிவகுக்கும் பிசியோதெரபி மருத்துவ கருத்தரங்கு" கோவை காவல் ஆணையர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியை மாநகர காவல் துணை ஆணையர் சுகாசினி தொடங்கி வைத்தார்.



இதில், வலி வருவதற்கான காரணங்கள், பிசியோதெரபி சிகிச்சை முறைகள், வலி வராமல் தடுக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.



குறிப்பாக பணியில் உள்ள பெண் காவலர்கள் சில நேரங்களில் நீண்ட நேரம் நிற்கவேண்டிய சூழலில் உடல் ரீதியாக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மகளிர் தினத்தன்று பிசியோதெரபி சிகிச்சை விழிப்புணர்வு வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...