கோவையில் நண்பர் வீட்டில் தங்க நகை திருட்டு - மதுகுடிக்கச் சென்றபோது கைவரிசை!

மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து மது விருந்து அளித்துள்ளார். அப்போது வினோத் வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகையை திருடிய அவரது நண்பர் நாமக்கல்லைச் சேர்ந்த பீஷ்மர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை ராமநாதபுரம் சக்தி நகர் பகுதியில் சேர்ந்தவர் வினோத். இவரது தாயார் மேட்டுப்பாளையத்தில் வசித்து வருகிறார்.

இவரைப் பார்ப்பதற்காக இவரது மனைவி ராகப்பிரியா மேட்டுப்பாளையம் சென்றுவிட்டார். அப்போது வினோத் தன்னுடன் பணியாற்றும் நான்கு நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து மது குடித்துள்ளார்.

இந்த நிலையில், ராகப்பிரியா மேட்டுப்பாளையத்திலிருந்து வந்து வீட்டில் தன் உடைமைகளை பார்த்தபொழுது மூன்று சவரன் தங்க நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது வினோத் தனது நண்பர்களுடன் மதுகுடித்ததைத் தெரிந்து கொண்ட ராகபிரியா, அதில் யாரேனும் ஒருவர் நகையை திருடி இருக்கலாம் என சந்தேகித்தார்.

இதையடுத்து, ராகப்பிரியா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார், வினோத்தின் நண்பர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நாமக்கல்லைச் சேர்ந்த பீஷ்மர் என்ற நபர் நகையை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை ராமநாதபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுகுடிக்கச் சென்றபோது நண்பர் வீட்டிலேயே நகைத் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...