நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெரிய வெற்றியை பெறும்..! - எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஈரோடு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலணி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:



கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின்போது உடுமலைப்பேட்டை பேருந்து விரிவாக்கம், நகராட்சி புதிய கட்டிடம். கால்நடை மருத்துவ பயிற்சி மையம், சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்து பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.ஆட்சியில் மகளிர்களுக்கு மானியத்தில் வழங்கிய இரு சக்கர வாகனங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் நிதி உதவி என பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. இவற்றிற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கிம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், நகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...