நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெரிய வெற்றியை பெறும்..! - எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ உடுமலை கே.ராதாகிருஷ்ணன், ஈரோடு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த சிவசக்தி காலணி பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குடிமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உடுமலை சட்டமன்ற உறுப்பினருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:



கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின்போது உடுமலைப்பேட்டை பேருந்து விரிவாக்கம், நகராட்சி புதிய கட்டிடம். கால்நடை மருத்துவ பயிற்சி மையம், சாலை விரிவாக்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

தற்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுகவினர் பொய் வாக்குறுதி அளித்து பணப்பட்டுவாடா செய்து மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளனர்.

அ.தி.மு.க.ஆட்சியில் மகளிர்களுக்கு மானியத்தில் வழங்கிய இரு சக்கர வாகனங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் நிதி உதவி என பல்வேறு நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. இவற்றிற்கெல்லாம் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் உடுமலை நகர செயலாளர் ஹக்கிம், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பர்ராஜன், குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ், நகர கழக நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...