கோவையில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு - இளைஞர் கைது செய்து 3 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபட்ட ஒண்டிபுதூரை சேர்ந்த விஜயகாந்த் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன.

சாவி இன்றி, வயரை கழட்டி, லாக்கை உடைத்து லாவகமான முறையில் வாகன கொள்ளை அரங்கேறிய நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூரில் வசிக்கின்ற விஜயகாந்த் என்ற நபர் கைதாகியுள்ளார். பொது இடங்களுக்குச்சென்று இருசக்கர வாகனங்களை திருடுவது விஜயகாந்த்தின் வாடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஐ லவ் கோவை பார்க்கிங், ராஜ வீதி, வடகோவை உள்ளிட்ட இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை விஜயகாந்திடமிருந்து மாநகர போலீசார் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வாகன கொள்ளையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...