கோவையில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு - இளைஞர் கைது செய்து 3 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபட்ட ஒண்டிபுதூரை சேர்ந்த விஜயகாந்த் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன.

சாவி இன்றி, வயரை கழட்டி, லாக்கை உடைத்து லாவகமான முறையில் வாகன கொள்ளை அரங்கேறிய நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூரில் வசிக்கின்ற விஜயகாந்த் என்ற நபர் கைதாகியுள்ளார். பொது இடங்களுக்குச்சென்று இருசக்கர வாகனங்களை திருடுவது விஜயகாந்த்தின் வாடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஐ லவ் கோவை பார்க்கிங், ராஜ வீதி, வடகோவை உள்ளிட்ட இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை விஜயகாந்திடமிருந்து மாநகர போலீசார் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வாகன கொள்ளையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...