கோவையில் தொடர் இருசக்கர வாகனம் திருட்டு - இளைஞர் கைது செய்து 3 வாகனங்கள் பறிமுதல்

கோவையில் நள்ளிரவில் இருசக்கர வாகனங்கள் திருட்டு அடிக்கடி நடந்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபட்ட ஒண்டிபுதூரை சேர்ந்த விஜயகாந்த் என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் நள்ளிரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வருகின்றன.

சாவி இன்றி, வயரை கழட்டி, லாக்கை உடைத்து லாவகமான முறையில் வாகன கொள்ளை அரங்கேறிய நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில், போலீசார் நடத்திய விசாரணையில் ஒண்டிப்புதூரில் வசிக்கின்ற விஜயகாந்த் என்ற நபர் கைதாகியுள்ளார். பொது இடங்களுக்குச்சென்று இருசக்கர வாகனங்களை திருடுவது விஜயகாந்த்தின் வாடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

விஜயகாந்தை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். ஐ லவ் கோவை பார்க்கிங், ராஜ வீதி, வடகோவை உள்ளிட்ட இடங்களில் திருடப்பட்ட 3 இருசக்கர வாகனங்களை விஜயகாந்திடமிருந்து மாநகர போலீசார் மீட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, வாகன கொள்ளையில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...